முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடஒதுக்கீடு - சமூக நீதிக்கான பாதை - 2

'ஏழைகளுக்கு உதவி செய்வதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?', 'சாதியில் முன்னேறிய வகுப்பில் இருக்கும் ஏழைகள் எங்குதான் போவார்கள்? மத்திய அரசு நிறைவேற்றியிருக்கும் இந்த 10% இடஒதுக்கீடு அவர்களுக்கு தானே உதவி செய்வதாக இருக்கிறது, அதற்கு எதிராக ஏன் போராட வேண்டும்?' இவ்வாறு இந்த 10% இடஒதுக்கீட்டை ஆதரிக்கும் சிலர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நமது நாட்டில் இடஒதுக்கீடு என்பது பொருளாதார அடிப்படையில் கொடுப்பது சாத்தியமற்றது என்பது தான் நிதர்சனம். ஒரு வாதத்திற்கு பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு கொடுக்கலாம் என்று வைத்துக்கொண்டாலும் இப்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த சட்டத் திருத்தம் எந்த ஒரு விதத்திலும் ஏழைகளுக்கு உதவ போவதில்லை.

2005இன் இறுதியில் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு இந்தியாவில் ஏழ்மை நிலையை பற்றி அறிய சுரேஷ் டெண்டுல்கர் என்பவறின் தலைமையில் ஒரு குழுவை அமைக்கிறது. இந்த குழு அதன் அறிக்கையை 2011 ஜனவரியில் சமர்ப்பித்தது. அந்த அறிக்கை இந்தியாவில் வறுமைக்கோடு என்பதற்கு ஒரு நியாயமற்ற கணக்கை சொன்னது. அதன்படி ஒரு நபர் ஒரு நாளைக்கு நகர்ப்பகுதியில் ரூ.33 மற்றும் கிராமப்பகுதியில் ரூ.27 வரை சம்பாதித்தால் அவர் ஏழ்மையானவர் இல்லை என்று வரையறுத்து இந்தியாவின் மக்கள் தொகையில் 22% பேர் வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பதாக நிர்ணயித்தது. இந்த அறிக்கை மக்களிடமும், ஊடகங்களிடமும் கடுமையான எதிர்ப்பை சந்தித்தது. எனவே 2012 இல் சி.ரங்கராஜன் என்பவர் தலைமையில் இன்னொரு குழு அமைக்கப்பட்டது. இந்த புதிய குழு அதன் அறிக்கையை 2014ம் ஆண்டு சமர்ப்பித்தது. இது வறுமைக்கோட்டிற்கு புதிய விளக்கமாக 2011-12இல் நகர்ப்புறத்தில் ஒருவர் ரூ.47 மற்றும் கிராமப்புறத்தில் ரூ.32 வரை சம்பாதித்தால் அவர் ஏழை இல்லை என்று வரையறுத்து இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள்   29.5% என்று நிர்ணயித்தது.

இந்த இரண்டு அறிக்கையும் உண்மைக்கு எவ்வளவு புறம்பானது? ஒரு அடிப்படை தேவையை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாத ஒரு வருமானத்தை காட்டி அதை சம்பாதித்தால் ஒருவர் ஏழ்மையானவர் இல்லை என்று நிர்ணயிப்பது எவ்வளவு அயோக்கியத்தனம்? இவ்வாறாக வறுமைக்கோட்டை நிர்ணயித்த மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசை கடுமையாக எதிர்த்து அதற்கு மாற்றாக வந்த பா.ஜ.க இப்போது கொண்டுவந்துள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்குக்கான 10% இடஒதுக்கீட்டு மசோதாவில், ஆண்டு ஒன்றில் ஒருவர்க்கு 8 இலட்சத்திற்கும் குறைவாக வருமானம் வந்தாலோ அல்லது 5 ஏக்கருக்கும் குறைவான விவசாய நிலம் வைத்திருந்தாலோ அல்லது 1000 சதுர அடிக்குள் ஒருவரது வீடு இருந்தாலோ அவர் சாதியாக முன்னேறிய வகுப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியவராக கருதப்படுவார் என்று கூறுகிறது. அதாவது 2012இல் நகர்ப்புறத்தில் வசிக்கும் ஒரு முற்பட்ட சாதியியைச் சார்ந்த ஒருவர் மாதத்திற்கு 1500 வரை வருமானம் ஈட்டினாலே அவர் ஏழை இல்லை என்று சொன்ன அரசு 2019இல் அவரை ஏழையாக கருதி இடஒதுக்கீடு அளிக்க அவர் மாதத்திற்கு 66,000 வரை சம்பாதிக்கலாம் என்று வரையறுக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில்(2012-2019) ஒரு ஏழை இவ்வளவு சம்பாதிப்பவராக அவர்களது வறுமை நிலைக்கு உண்மையில் இந்த அளவுகோல் என்பது சாதியாக முன்னேறிய வகுப்பில் இருக்கும் சில பிரிவினருக்கே எதிரானது. எனவே இந்த விஷயத்தில் மத்தியில் ஆண்ட காங்கிரஸ், தற்போது ஆளுகின்ற பா.ஜ.க என இரண்டு கட்சிகளுக்கும் ஏழைகளின் மீதோ, சாதியாக பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் மீதோ துளியளவும் அக்கறையில்லை என்பதையே காட்டுகிறது. அப்படியானால் இந்த 10% இடஒதுக்கீட்டினால் பயனடைய போவது யார்? 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எடப்பாடி பழனிச்சாமியும் இரசகுல்லா கடைக்காரரும்

இரண்டு வருடங்களுக்கு முன் 2017இல் ஒரு கல்லூரியில் நேர்காணலுக்காக கொல்கத்தா வரை செல்ல நேர்ந்தது. வங்க மொழி(பங்ளா) தெரியாது, இந்தியும் தெரியாது, தெரிந்ததெல்லாம் தமிழ் மற்றும் இந்திய ஆங்கிலம் மட்டுமே. ஒரு வாரம் அங்கு தங்க வேண்டிய சூழல், ஆனால் அந்த ஒரு வாரத்தில் ஒரு முறை கூட பங்ளாவோ, இந்தியோ தெரியாத குறையை கொல்கத்தா எனக்கு சிரமமாக முன்னிறுத்தவில்லை. டேக்சியில் பேரம் பேசுவது தொடங்கி, பேருந்துகளில், டீ கடைகளில், உணவகங்களில், நான் நேர்காணலுக்கு சென்ற கல்வி நிறுவனத்தில், சுற்றிப் பார்க்க சென்ற இடங்களில் என எங்குமே எனக்கு பங்ளாவோ, இந்தியோ தேவைப்படவில்லை. வங்க மக்கள் என் மொழியின் காரணமாக எனக்கு எந்த குறையையும் வைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இத்தனைக்கும் அவர்கள் நான் வங்க மொழி பேசுபவன் அல்ல என்பதை உணர்ந்ததும் என்னுடன் அதிகமாக உரையாட விரும்பினர் என்றே எனக்கு தோன்றியது. உதாரணமாக நான்கு நாள் நேர்காணலில் ஒரு நாள் நான் தங்கியிருந்த அறைக்கு திரும்புகையில் கொல்கத்தா மாநகரப் பேருந்தில் ஒரு கன்டக்டர், மாநில பேருந்துகளில் அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களைதான் பணியமர்த்துவார்கள், அவர் ஒரு வங்காளி. அவ...

அரசியல் பிழைத்தோர் - 2

மதவாதத்திற்கு முடிவுகட்டுவோம்... 6 மாதங்களுக்கு முன்பாக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையிலிருந்து அதன் உறுப்புக் கல்லூரிகளுக்கு(Affiliated Colleges) ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில் அறிஞர் அண்ணா எழுதிய 'நீதிதேவன் மயக்கம்' எனும் நாடகம்  பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்படுவதாகவும் அதற்கு பதில் அரு.இராமநாதன் அவர்கள் எழுதிய 'இராஜ இராஜ சோழன்' எனும் நாடகம் இணைக்கப்படுவதாக இருந்தது அந்த சுற்றறிக்கை. இதற்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில் மாவட்ட ஆட்சியருக்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டது. ஆட்சியர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டபோது அந்த துறைத் தலைவர் தன்னை கேட்காமல் இந்த சுற்றறிக்கையை அனுப்பிவிட்டதாகவும் தான் அதை திரும்பப்பெறுவதாகவும் அண்ணாவின் 'நீதிதேவன் மயக்கம்' எனும் நாடகமே பாடத்திட்டத்தில் தொடரும் என்று கூறியிருக்கிறார். மேலும் ஆட்சியர், பாடத்திட்டத்தில் மாற்றம் என்பது அகாடமி கவுன்சிலின் அனுமதி பெறாமல் நடந்திருப்பதற்கு துணை வேந்தரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். நாட்ட...

புறநகர்

அவனுக்கு தெரியாத ஊரில் எனக்கு புரியாத மொழியில் வழி கேட்டான் ஒருவன் என்னிடம் நகரம் பார்த்துக்கொண்டிருந்தது… எனக்கே தெரியாத அந்த ஊரில் அவனுக்கு புரியாத மொழியில் ‘தெரியாது’ என்று சொன்னேன் நான் நகரம் பார்த்துக்கொண்டிருந்தது… எங்கள் அருகில் நகரின் பூர்வகுடி ஒருவன் எட்டு ரூபாய் பேருந்துக்காக காத்திருந்தான் நகரம் பார்த்துக்கொண்டிருந்தது…