'இந்தியாவில் சமத்துவம்(Equality) என்பது சமமானவர்களிடம் மட்டுமே நிலவுகிறது, எனவே சமமற்றவர்களை சமமாக நடத்தினால் அது சமனற்ற தன்மையை(Inequality) மட்டுமே நிலைநிறுத்தும்' என்பது சட்ட நிபுணர்களின் கூற்று. இன்றைய நிலையில் நாம் மேற்கண்ட வரிகளை பற்றி மிகவும் ஆழமாக சிந்திக்க வேண்டியிருக்கிறது. 'சட்டத்தின் பார்வையில் நாட்டில் அனைவரும் சமம்தான் என்றால் எதற்கு அரசாங்கமே சட்டம் இயற்றி இடஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்புகளை வழங்க வேண்டும்?' என்பது இந்த இடஒதுக்கீட்டை எதிர்க்கும் பலர் முன்வைக்கும் அபத்தமான கேள்வி. இதற்கான பதிலை புரிந்துகொள்வதற்கு முன்பாக நாம் நமது நாட்டின் அடிப்படை சமூக கட்டமைப்பை உள்வாங்க வேண்டும். வரலாற்றின் அடிதொட்டு இந்திய சமூகம் பல ஏற்றத்தாழ்வுகளால் நிரம்பியது. எந்த ஆட்சியின் கீழும் இப்போதுள்ள இந்திய நிலப்பரப்பில் சமூகம் சமத்துவமிக்கதாக இருந்ததில்லை என்பதாகவே வரலாறு கூறுகிறது. நாம் 20ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷாரிடம் இருந்து சுதந்திரம் பெற்று குடியரசாக மாறியபோது நமது அடிப்படை அரசியல் சாசனம் இவ்வாறு கூறுகிறது, 'இந...