முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அரசியல் பிழைத்தோர் - 2

மதவாதத்திற்கு முடிவுகட்டுவோம்... 6 மாதங்களுக்கு முன்பாக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையிலிருந்து அதன் உறுப்புக் கல்லூரிகளுக்கு(Affiliated Colleges) ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில் அறிஞர் அண்ணா எழுதிய 'நீதிதேவன் மயக்கம்' எனும் நாடகம்  பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்படுவதாகவும் அதற்கு பதில் அரு.இராமநாதன் அவர்கள் எழுதிய 'இராஜ இராஜ சோழன்' எனும் நாடகம் இணைக்கப்படுவதாக இருந்தது அந்த சுற்றறிக்கை. இதற்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில் மாவட்ட ஆட்சியருக்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டது. ஆட்சியர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டபோது அந்த துறைத் தலைவர் தன்னை கேட்காமல் இந்த சுற்றறிக்கையை அனுப்பிவிட்டதாகவும் தான் அதை திரும்பப்பெறுவதாகவும் அண்ணாவின் 'நீதிதேவன் மயக்கம்' எனும் நாடகமே பாடத்திட்டத்தில் தொடரும் என்று கூறியிருக்கிறார். மேலும் ஆட்சியர், பாடத்திட்டத்தில் மாற்றம் என்பது அகாடமி கவுன்சிலின் அனுமதி பெறாமல் நடந்திருப்பதற்கு துணை வேந்தரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். நாட்ட...

அரசியல் பிழைத்தோர் - 1

Democracy vs Dictatorship '21ம் நூற்றாண்டில் பிறந்து, இந்த தேர்தலில், நாட்டின் ஜனநாயக வழிமுறைகளில் முதன்முதலாக பங்கெடுக்கப் போகும் இளம் நண்பர்களே, உங்கள் வாக்குகளை உயர்ந்த இலட்சியங்களுக்காக பயன்படுத்தி இந்த தருணத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுங்கள்.' கோவையில் சமீபத்தில் நடைபெற்ற பாஜக வின் தேர்தல் பிரச்சார பொதுக்கூடத்தில் இவ்வாறு குறிப்பிட்டது நம் பிரதமர் நரேந்திர மோடி. இதனை வாசித்து விட்டு அப்படியே கடந்து போகாமல் மீண்டும் இந்த வாசகத்தை பொறுமையாக வாசிக்கிறேன். உண்மையில் பிரதமர் மோடி ஒரு மகோன்னதமான கருத்தை இளைஞர்களுக்கு தன் பேச்சில் கூறியுள்ளார். ஆம்... இன்றைய நிலையில் அப்படி ஒரு உயர்ந்த இலட்சியம் என்றால் அது மற்றுமொரு பாஜக ஆட்சி அமையாமலும் அதன் பிரதமராக மோடி வராமலும் பார்த்துக்கொள்வது தான் என்பதை முதல்முறை வாக்களிக்க போகும் 3.5 கோடி வாக்காளர்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் மீண்டுமொரு பாஜக ஆட்சி அமைந்தால் இதுவே அந்த இளைஞர்கள் வாக்களிக்கும் கடைசி தேர்தலாக மாறும் அபாயம் கூட அதில் உள்ள...